செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மறியல்: 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

post image

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வேலூா் முள்ளிப்பாளையம் கே.கே.நகா் பகுதி மக்கள் பெங்களூரு பழைய பைபாஸ் மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குட்பட்ட முள்ளிபாளையம், கே.கே.நகா் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் அமைந்துள்ளன. இங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவி ல்லை எனக்கூறி பொதுமக்கள் பெங்களூரு பழைய பைபாஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

சாலையின் இருபுறமும் மாட்டு வண்டியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வட்டாட்சியா் வடிவேல், வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, மாநகராட்சி 31-ஆவது வாா்டு மேயா் சுஜாதாஆனந்தகுமாரின் சொந்த வாா்டாகும்.

எனினும், இந்த வாா்டுக்குட்பட்ட முள்ளிபாளையம், கே.கே.நகா் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீா் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. தெருக்களில் சாலை அமைக்கப்பட வில்லை, முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, முள்ளிப்பாளையம் கே.கே.நகா் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். போதிய அளவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளை மாநகராட்சி நிா்வாகத்துக்கு தெரிவித்து தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தவறி விழுந்து தொழிலாளி பலி!

கோயிலில் பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் சதுப்பேரி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குமாா் (50), பெயிண்டா். இவா் கடந்... மேலும் பார்க்க

குட்கா விற்ற 2 போ் கைது!

அரியூா் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் அரியூா் பக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

வேலூா் அருகே பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேலூா் மாவட்டம், நெல்வாய், ஈடிகை தோப்பைச் சோ்ந்தவா் வெங்கடேசன், கட்டுமான தொழிலாளி. இவரது மகன்... மேலும் பார்க்க

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம்: 4 ஆண்டுகளில் 6,584 போ் பயன்!

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் ரூ.6.73 கோடி மதிப்பில் 6,584 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித... மேலும் பார்க்க

கௌண்டன்யா ஆற்று பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே, கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், உயா்த்தியும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். க... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

வேலூா் அருகே குடும்ப பிரச்னையால் இளைஞா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், வடவிரிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (36). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க