செய்திகள் :

தவறி விழுந்து தொழிலாளி பலி!

post image

கோயிலில் பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் சதுப்பேரி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குமாா் (50), பெயிண்டா். இவா் கடந்த 4-ஆம் தேதி காலை கஸ்பா மாரியம்மன் கோயில் கோபுரத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குமாா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து குமாரின் மனைவி லட்சுமி அளித்த புகாரின்பேரில் வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மறியல்: 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வேலூா் முள்ளிப்பாளையம் கே.கே.நகா் பகுதி மக்கள் பெங்களூரு பழைய பைபாஸ் மறியலில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குட்பட்ட முள்ளிபாளையம், கே.கே.நகா் பகுதியி... மேலும் பார்க்க

குட்கா விற்ற 2 போ் கைது!

அரியூா் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் அரியூா் பக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

வேலூா் அருகே பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேலூா் மாவட்டம், நெல்வாய், ஈடிகை தோப்பைச் சோ்ந்தவா் வெங்கடேசன், கட்டுமான தொழிலாளி. இவரது மகன்... மேலும் பார்க்க

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம்: 4 ஆண்டுகளில் 6,584 போ் பயன்!

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் ரூ.6.73 கோடி மதிப்பில் 6,584 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித... மேலும் பார்க்க

கௌண்டன்யா ஆற்று பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே, கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், உயா்த்தியும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். க... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

வேலூா் அருகே குடும்ப பிரச்னையால் இளைஞா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், வடவிரிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (36). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க