செய்திகள் :

டேட்டிங் ஆப்பில் நெருக்கம்; ஹோட்டலுக்கு சென்ற இளைஞரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. 21 பேர் கைது!

post image

டேட்டிங் செயலி மூலம் ஆண், பெண் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். இந்த நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது.

இந்த டேட்டிங் ஆப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இக்கும்பல் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் சேர்ந்து கொண்டு டேட்டிங் ஆப் நண்பர்களை மோசடி செய்துள்ளனர்.

டேட்டிங் ஆப் மூலம் நிஷாந்த் என்பவருக்கு திஷா(23) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து திஷாவும், நிஷாந்தும் போன் நம்பர்களை பகிர்ந்து கொண்டனர். இருவரும் நேரில் சந்தித்து பேச முடிவு செய்தனர். இதையடுத்து போரிவலியில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் மது ஆர்டர் செய்து குடித்தனர்.

Dating

அதோடு ஆடம்பர உணவு வகைகளையும் அப்பெண் வாங்க வைத்து சாப்பிட்டார். இருவரும் சில மணி நேரம் ரெஸ்டாரண்டில் மது, சாப்பாடு என நேரத்தை செலவிட்டனர். இறுதியில் வெயிட்டர் பில் கொண்டு வந்துப்கொடுத்தபோது அதனை பார்த்து நிஷாந்த் அதிர்ச்சியாகிவிட்டார்.

ரூ.35 ஆயிரம் அளவுக்கு வந்த பில்லை கட்டும்படி இஷாந்திடம் திஷா கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த பில்லை தன்னால் கொடுக்க முடியாது என்று நிஷாந்த் தெரிவித்தார்.

இதனால் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் மிரட்டினர். உடனே நிஷாந்த் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்ததை தொடர்ந்து ரெஸ்டாரண்ட் நிர்வாகம் ரூ.5 ஆயிரத்தை குறைத்துக்கொள்வதாக தெரிவித்தது.

எஞ்சிய ரூ.30 ஆயிரத்தை இருவரும் பகிர்ந்து கொடுத்தனர். நிஷாந்த் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தார். நீண்ட நேரத்திற்கு பிறகுதான் பணம் ரெஸ்டாரண்ட் ஐ.டிக்கு அனுப்பவில்லை என்று நிஷாந்திற்கு தெரிய வந்தது. இதனால் இதில் சந்தேகம் அடைந்த நிஷாந்த் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். ஏற்கெனவே இதுபோன்ற புகார்கள் வந்திருப்பதால் நிஷாந்த் புகார் குறித்து போலீஸார் முழு அளவில் விசாரணையை தொடங்கினர்.

அதிர்ச்சி!

டேட்டிங் ஆப்பில் அறிமுகமான பெண் திஷாவை போலீஸார் வரழைத்து விசாரித்தனர். இதில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் நபர்களை ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்று மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

சம்பந்தப்பட்ட ரெஸ்டாரண்ட் நிர்வாகத்திடம் முதலிலேயே பேசி பில்லை அதிகரித்து போடும் படி கூறிவிடுகின்றனர். கூடுதலாக வரும் பணத்தை இக்கும்பல் எடுத்துக்கொள்வது தெரிய வந்தது. இம்மோசடியில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இம்மோசடியில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளது.

பதின்பருவ மாணவர் மர்ம மரணம்; தன்பாலின உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? - இளைஞரிடம் போலீஸார் விசாரணை

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர். அந்த மாணவர், அ... மேலும் பார்க்க

`அன்று அதை விரும்பவில்லை, கட்டாயபடுத்தி உறவுகொண்டதால்...' - புனே பாலியல் புகாரில் திருப்பம்

புனே கொண்ட்வா பகுதியில் கடந்த வாரம், புதன்கிழமை கூரியர் கொண்டு வந்த நபர் தனியாக இருந்த 22 வயது பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார்... மேலும் பார்க்க

கரூர்: வழக்கறிஞரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி கைது; மா.செ காட்டம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிரிப்ஸ்சன் என்பவர் கரூர் கோதூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜா என்ற நில தரகரிடம் முன்பணமாக, ரூ.96 லட்சம் கொடுத்து... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் ... மேலும் பார்க்க

மூளி தேவி: சப் இன்ஸ்பெக்டராக மாறுவேடமிட்டு போலீஸ் அகாடமியிலேயே 2 ஆண்டுகள் சுற்றிய பெண் - யார் இவர்?

ராஜஸ்தான் போலீஸ் அகாடமி உள்ளேயே இரண்டு ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டர் போல மாறுவேடம் போட்டு திரிந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றுள்ளார், அதிகாரப்பூர்வ சீருடைகள் அணிந்து வலம... மேலும் பார்க்க

``காவல்துறையினர் அடித்துக் கொன்றனர்'' - நீதிமன்றத்தில் முறையிட்ட உறவினர்; 6 பேர் மீது FIR பதிவு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் வாசிம்(22). இவர் ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மதோபூரில் உள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தார். இது ... மேலும் பார்க்க