செய்திகள் :

காந்தாரா சேப்டர் - 1 ரிலீஸ் அப்டேட்!

post image

காந்தாரா சேப்டர் - 1 வெளியீட்டுத் தேதியை போஸ்டர் வெளியிட்டுப் படக்குழுவினர் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.

கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவி வந்தன. இதனால், திட்டமிட்டபடி இந்தாண்டு படம் வெளியாகாது என்று கூறப்பட்டது.

இதனிடையே, குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது போஸ்டர் வெளியிட்டு மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைத்துத் தொடர்களும் அரை மணிநேரம் ஒளிபரப்பாகும் நிலையில், இரு தொடர்கள் கூடுதல் நேரத்துடன் ஒளிபரப்பாகவுள்ளன. தற்போது முன்னணி தொடர்களாக உள்ள வீரா மற்றும் கெட்டி மேளம் ஆகிய இரு ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 7) தொடங்கப்பட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும்... மேலும் பார்க்க

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கோவை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவை டவுன்ஹால் வைஸ்யாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோவில் கும்... மேலும் பார்க்க

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த தொடரில் திவ்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.திருச்செந்... மேலும் பார்க்க

டிமான்ட்டி காலனி - 3 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க... மேலும் பார்க்க