செய்திகள் :

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!

post image

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை நடந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நேற்று மதியம் முதல் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து, இன்று காலை குடமுழுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், தரிசனத்துக்கான காத்திருப்பு அறைக்குள் மதியம் 2 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமரிசையாக நடந்த குடமுழுக்கு!

குடமுழுக்கையொட்டி கடந்த ஜூலை 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாள்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

ஏழாம் நாளான திங்கட்கிழமை திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு பன்னிரெண்டாம் கால யாகசாலை பூஜைகளாகி காலை 6.22 மணிக்கு திருக்கோயில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை, சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. அப்போது ஓதுவார்கள் தமிழில் வேதங்கள் ஓதினர்.

குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ விதுசேகர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ஜெயராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, ... மேலும் பார்க்க

குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறை: இயக்குநர் ராம்

குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறை என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ’பறந்து ... மேலும் பார்க்க

ஒரே நாளில் வெளியாகும் பிரபாஸ், ரன்வீர் சிங் படங்கள்!

பிரபாஸின் ராஜாசாப், ரன்வீர் சிங்கின் துரந்தர் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில்... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித... மேலும் பார்க்க

சுகப்பிரசவம் குறித்து சின்ன திரை நடிகை நெகிழ்ச்சி!

சின்ன திரை நடிகை சமீரா ஷெரீஃப் தனக்கு சுகப்பிரசவம் நடந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இரண்டாவது முறையாக தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், கருவுற்ற காலத்தில் கடந்து வந்த கடினமான சூழல... மேலும் பார்க்க

கேதார்நாத் பயண அனுபவத்தைப் பகிர்ந்த பவித்ரா ஜனனி!

சின்ன திரை நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான பவித்ரா ஜனனி கேதார்நாத்திற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அதன் பயண அனுபவங்களை விடியோவாக ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார். அதில், கேதார்நாத் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க