செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.85.87 ஆக முடிவு!

post image

மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணய மதிப்பு ஆகியவற்றின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.85.87 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக கட்டணங்கள் மீதான நிச்சயமற்ற தன்மையால் அந்நிய நிதி வெளியேறுவதும் உள்ளூர் சந்தையில் இதன் அழுத்தமும் வெகுவாக தெரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.53 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.51 முதல் ரூ.86.03 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 47 காசுகள் சரிந்து ரூ.85.87ஆக நிறைவடைந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 85.40 ஆக இருந்தது.

இதையும் படிக்க: அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக ஏற்ற-இறக்கத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி முடிவு!

The rupee fell sharply by 47 paise to close at 85.87 against the US dollar on Monday.

ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு!

புதுதில்லி: ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 11% சரிந்து 87,286 ஆக குறைந்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது.முந்தைய ஆண்டை ஒப்பிடும்போத... மேலும் பார்க்க

டிவிஎஸ் ஜூபிடர் நேபாளத்தில் அறிமுகம்!

சென்னை: டிவிஎஸ் மோட்டார்ஸ் இன்று அதன் இரு சக்கர வாகனமான டிவிஎஸ் ஜூபிடர் 110 சிசி வாகனத்தை நேபாளத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் ம... மேலும் பார்க்க

அமேசான் பிரைம் விற்பனையில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்!

ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் பிரைம் விற்பனை நாளான ஜூலை 12 ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.ஜூலை மாதத்தி... மேலும் பார்க்க

அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக ஏற்ற-இறக்கத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி முடிவு!

மும்பை: ஜூலை 9 அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குகள் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றத்துக்கு மத்தியில், பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் ந... மேலும் பார்க்க

ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு!

சென்னை: ஜூன் 2025ல் மின்சார கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார் விற்பனை கடந்த மாதம் சரிந்ததாக தெரிவித்துள்ளது ஸ்ரீராம் ஃபைனான்ஸின... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 14 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க