செய்திகள் :

ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு!

post image

சென்னை: ஜூன் 2025ல் மின்சார கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார் விற்பனை கடந்த மாதம் சரிந்ததாக தெரிவித்துள்ளது ஸ்ரீராம் ஃபைனான்ஸின் மொபிலிட்டி.

இதற்கிடையில், லாரி வாடகைகள் உறுதியாக இருந்தாகவும் அதன் அடிப்படையில் தில்லி-மும்பை-தில்லி அல்லது தில்லி-ஹைதராபாத்-தில்லி என பல்வேறு வழித்தடங்களில் 18 டன் பேலோடுகளுக்கான வாடகை அதிகரித்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஜூன் 2024 உடன் ஒப்பிடும்போது ஜூன் 2025ல் லாரி வாடகை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மே 2025ல் இருந்த வாடகை விகிதங்களுடன் ஒப்பிடும்போது இது கடந்த மாதம் 1.3 சதவிகிதம் அதிகரிப்பு.

மாதாந்திர அடிப்படையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்து 93,872 யூனிட்டுகளாக உள்ளது. மே 2025ல் இது 88,986 யூனிட்டுகளாக இருந்தது.

ஜூன் 2025ல் மின்சார கார்களின் விற்பனை 9,804 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதுவே ஜூன் 2024ல் வெறும் 717 யூனிட்டுகளாக இருந்தது.

மாதாந்திர அடிப்படையில், மின்சார கார்களின் விற்பனை மே 2025ல் விற்கப்பட்ட 9,693 யூனிட்டுகளிலிருந்து 1 சதவீதம் அதிகரித்து 9,804 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

மின்சார வாகனங்களின் விற்பனையைப் பொறுத்தவரை, நுகர்வோர் ஆர்வம் மற்றும் முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் புதிய மாடல் வெளியீடுகளின் அலையால் இயக்கப்படும் முன்னறிவிப்புகளுக்கு முன்னதாகவே இது வேகமடைந்து வருவதாக தெரிவித்தார் ஸ்ரீராம் நிதி நிர்வாக இயக்குநர் ஒய்.எஸ். சக்ரவர்த்தி.

எரிபொருள் நுகர்வைப் பற்றி குறிப்பிடுகையில், ஜூன் 2025ல் பெட்ரோல் நுகர்வு 6.4 சதவிகிதம் அதிகரித்து 3.51 டன்னாக அதிகரித்தது. இதுவே ஜூன் 2024ல் இது 3.30 டன்னாக இருந்தது.

டீசல் நுகர்வு ஜூன் 2025ல் 1.2 சதவிகிதம் அதிகரித்து 8.08 டன்னாகவும், ஜூன் 2024ல் 7.98 டன்னாகவும் இருந்தது.

இதையும் படிக்க: மாருதி சுஸுகி விற்பனை 6% சரிவு

Sales of electric motor cars grew in June 2025 while passenger car sales that run on internal combustion engines declined.

உற்பத்தித் துறையில் 14 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

59 முறை அதிக சந்தா பெற்ற கிரிசாக் ஐபிஓ!

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு மற்றும் தீர்வுகள் வழங்குநரான கிரிசாக் லிமிடெட், தனது ஐபிஓ-வின் இறுதி நாளில் இன்று 59.82 முறை சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.ரூ.860 கோடி மதிப்புள்ள ஆரம்ப பங்கு விற்பனையில... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39ஆக நிறைவடைந்தது.அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளால் ர... மேலும் பார்க்க

நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

மும்பை: வங்கிப் பங்குகளில் கொள்முதல் மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தன.இன்றைய வர்த... மேலும் பார்க்க

விவோ ஃபோல்டு மொபைல் ஜூலை 14-ல் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ நிறுவனத்தில் விவோ எக்ஸ் ஃபோல்டு 5 மற்றும் விவோ எக்ஸ்200 ஆகிய மொபைகளின் அறிமுக வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்... மேலும் பார்க்க

முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ புதிய விதிமுறை

வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர், அதனை முன்கூட்டியே செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.தனிநபர்கள் அல்லது தொழில் ... மேலும் பார்க்க