செய்திகள் :

59 முறை அதிக சந்தா பெற்ற கிரிசாக் ஐபிஓ!

post image

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு மற்றும் தீர்வுகள் வழங்குநரான கிரிசாக் லிமிடெட், தனது ஐபிஓ-வின் இறுதி நாளில் இன்று 59.82 முறை சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.

ரூ.860 கோடி மதிப்புள்ள ஆரம்ப பங்கு விற்பனையில் 2,58,36,909 விண்ணப்பத்திற்கு 1,54,56,79,488 பங்குகள் விற்பனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளது என்எஸ்இ தரவு.

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு 134.35 மடங்கு அதிகமாக சந்தா பெற்ற நிலையில், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 76.15 மடங்கு சந்தாவைப் பெற்றது. அதே வேளையில் சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களிடம் 10.24 மடங்கு சந்தாவைப் பெற்றது கிரிசாக்.

ஆரம்ப சலுகை விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.233 முதல் ரூ.245 என விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதே வேளையில் நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.258 கோடியைப் பெற்றுள்ளதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.1,000 கோடி திரட்ட முன்மொழிந்த நிறுவனம், வெளியீட்டு அளவை தற்போது ரூ.860 கோடியாகக் குறைத்துள்ளது. சலுகை அளவு குறைவதற்கான எந்த குறிப்பிட்ட காரணத்தையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்படும்.

இந்த ஐபிஓ-விற்கான முன்னணி மேலாளர்களாக ஈக்விரஸ் கேபிடல் மற்றும் ஆனந்த் ரதி அட்வைசர்ஸ் உள்ளனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39ஆக நிறைவடைந்தது.அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளால் ர... மேலும் பார்க்க

நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

மும்பை: வங்கிப் பங்குகளில் கொள்முதல் மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தன.இன்றைய வர்த... மேலும் பார்க்க

விவோ ஃபோல்டு மொபைல் ஜூலை 14-ல் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ நிறுவனத்தில் விவோ எக்ஸ் ஃபோல்டு 5 மற்றும் விவோ எக்ஸ்200 ஆகிய மொபைகளின் அறிமுக வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்... மேலும் பார்க்க

முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ புதிய விதிமுறை

வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர், அதனை முன்கூட்டியே செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.தனிநபர்கள் அல்லது தொழில் ... மேலும் பார்க்க

15,004 யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகப... மேலும் பார்க்க

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 10% உயா்வு

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க