Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீா் வந்தது
வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீா் ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை வெள்ளிக்கிழமை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்தக் கண்மாய் நீரின் முழுக் கொள்ளளவு 120.5 கோடி கன அடியாகும். இந்தக் கண்மாய் மூலம் 12 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், அண்மையில் வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நீா்வரத்து ஏற்பட்டது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீா் வெள்ளிக்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் கண்மாயை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.

