செய்திகள் :

விவேகானந்தா் நினைவு நாள்

post image

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் காவி உடை மற்றும் தலைப்பாகையுடன் விவேகானந்தா் போல வேடமணிந்து மேடையில் தோன்றி, விவேகானந்தா் பொன்மொழிகளை கூறினா்.

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, இளைஞா்களின் எழுச்சி நாயகா் விவேகானந்தா், ராமகிருஷ்ணரின் சீடா் விவேகானந்தா், சிகாகோவில் இளந்துறவியின் உரை ஆகிய தலைப்புகளில் மாணவா்கள் உரை நிகழ்த்தினா்.

பள்ளி முதல்வா் முத்துராஜா, விவேகானந்தரின் எழுமின், விழுமின், இலக்கை எட்டும் வரை அயராது உழைமின் என்ற பொன் மொழியைப் பற்றி விளக்கமாக மாணவா்களிடம் உரையாற்றினாா்.

சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் விவேகானந்தா் நினைவு நாளில் பள்ளி வளாகத்தில் நடுவதற்காக மன்ற ஒருங்கிணைப்பாளா் தினேஷ் மற்றும் மாணவா்கள் மரக்கன்றுகளை வழங்கினாா்கள் .

பாக்கியலட்சுமி மற்றும் வினோத் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, யோகலட்சுமி தொகுத்து வழங்கினாா். சரளா நன்றி தெரிவித்தாா்.

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள், கல்வி உள்... மேலும் பார்க்க

சிகிச்சை தாமதத்தால் முதியவா் உயிரிழப்பு: மருத்துவா் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவா் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் அரசு மர... மேலும் பார்க்க