செய்திகள் :

நீதி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் -கோவை வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை

post image

கோவை மருதமலை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் (வயது 68). இவர் அங்கு புதிதாக வீடு கட்டி வந்தார். இதற்கான பணிகளை 23 வயது பெண் கட்டிட கலை நிபுணரிடம் கொடுத்து கண்காணித்து வந்தார்.

கடந்தாண்டு ஆனந்த கிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக அந்தப் பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துள்ளார்.

ஆனந்த கிருஷ்ணன்

அதனடிப்படையில் வீட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு, காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆனந்த கிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் ஆனந்த கிருஷ்ணன் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே ஆனந்த கிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததை போட்டோ, வீடியோ எடுத்து பெண்ணை பிளாக் மெயில் செய்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதில் வேதனையடைந்த அந்தப் பெண் மனோஜ் பாண்டியன் என்ற வழக்கறிஞரை அணுகி, இந்தப் பிரச்னைக்கு தீர்வளிக்குமாறு கேட்டுள்ளார். அவருக்கு நம்பிக்கை கூறிய மனோஜ், மறுபக்கம் ஆனந்த கிருஷ்ணனிடம் பேசியுள்ளார்.

மனோஜ் பாண்டியன்

ஆனந்துடன் இணைந்து மனோஜ் பாண்டியனும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவி புகார் அடிப்படையில் மனோஜ் பாண்டியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  பாதிக்கப்பட்ட பெண் மனோஜ் பாண்டியன் மீது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலிலும் புகார் அளித்திருந்தார்.

பார் கவுன்சில்

அதனடிப்படையில் மனோஜை கடந்த டிசம்பர் மாதமே 6 மாதங்களுக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்திருந்தனர். இந்நிலையில் அவரை மேலும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.  

Bihar: பாஜக தொழிலதிபரை சுட்டுக் கொன்ற மர்ம கும்பல்; மகனைப் போலவே தந்தையும் படுகொலை.. என்ன நடந்தது?

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. தொழிலதிபரான இவர் பாஜக-வில் இருக்கிறார். கோபால் மாநிலம் முழுவதும் மகத் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.கோபால் நேற்று இரவு வெளியில் சென்று வ... மேலும் பார்க்க

Custodial Death: `நிகிதாவின் புகார் முதல் சிகரெட் சூடு வரை’ - அஜித்குமார் மரண வழக்கில் நடந்தது என்ன?

தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இதுவரை அஜித் குமார் வழக்கில... மேலும் பார்க்க

தென்காசி: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; 6 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது!

தென்காசி, கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகப்படி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழியா... போலீஸ் விசாரணை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள செ... மேலும் பார்க்க

`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கந்துவட்டிக் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலைபுதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான விக்ரம், இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மினி லாரி ஒன்றை வாங்கிய விக்ரம... மேலும் பார்க்க

கடலூர்: `காதலன் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்!’ - கணவருக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண் காவலர்

கடலூரைச் சேர்ந்த சோனியா சென்னை ஆவடி ஆயுதப் படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கும், அங்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கடலூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக ம... மேலும் பார்க்க