செய்திகள் :

காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்பவம்!

post image

பிகார் மாநிலத்தில் பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் காங்கிரஸ் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு வழங்கிய நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.

பிரியதர்ஷினி உதான் திட்டம் என்ற பெயரில் 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கியது காங்கிரஸ். ஆனால், அதில் திட்டத்தின் விளம்பரத்துடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த நாப்கின் அட்டையில், பிகாரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மாதந்தோறும் மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள பேச்சாளர், சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பெண்களை இழிவுபடுத்தும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் ஏன் வந்தது என்பது கேள்வியல்ல, இந்த காலத்திலும் கூட, பெண்கள் மாதவிலக்கின்போது ஏன் நாப்கின் பயன்படுத்தாமல், பழைய துணிகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது என்பதே கேள்வி என்று தெரிவித்துள்ளனர்.

சிந்தூர் பெட்டி முதல், தடுப்பூசி சான்றிதழ் வரை மோடியின் புகைப்படத்தைப் போட்டுக் கொள்ளும் பாஜக, தற்போது ராகுல் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பிகிறதா என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பௌத்த, சீக்கியர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியுடன் யாத்திரை திட்டம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் பௌத்த, சீக்கிய பக்தர்களுக்கு ஆன்மிக பயணத்தை எளிதாக்கும் வகையில் இரண்டு யாத்திரை உதவித் திட்டங்களைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மறு ஆய்வுக் க... மேலும் பார்க்க

நீரவ் மோடியின் தம்பி நேஹல் மோடியும் மோசடி வழக்கில் கைது!

இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியான நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடியும் வேறொரு மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோட... மேலும் பார்க்க

யூ டியூப் சானல்களின் வருவாய்க்கு ஆபத்து! ஜூலை 15 முதல் புதிய விதி!

விடியோக்களை பதிவேற்றும் தளமான யூ டியூப், தனது பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதில், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் மற்றும் பலரும் ஏற்கனவே போட்ட விடியோக்களை போட்டு வருவாய் ஈட்டுவது இனி இயலா... மேலும் பார்க்க

அணு ஆயுதப் போராக மாறியிருக்கும்! முடிவெடுக்க வெறும் 30 வினாடியே இருந்தது!

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நடந்தபோது, இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கியபோது, முடிவெடுக்க வெறும் 30 வினாடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் பதுங்குமிடம் தகர்ப்பு! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்று, பாதுகாப்புப் படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது.பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோடே வனப்பகுதியில், அம்மாநில காவல் துறையினர் மற்றும் ரா... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

ஹிமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஹிமாசலில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு க... மேலும் பார்க்க