செய்திகள் :

ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

post image

ஹிமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஹிமாசலில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்துவருகின்றது. மேக வெடிப்புகளால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் காங்க்ரா, சிர்மௌர் மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உனா, பிலாஸ்பூர், ஹமீர்பூர், சம்பா, சோலன், சிம்லா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, குடியிருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வானிலை எச்சரித்துள்ளது. ஜூலை 5 முதல் 9 வரை மாநிலத்தில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டியின் சிம்லா மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்தது, அதே நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அகார் மாவட்டத்தில் 7 செ.மீ, அதைத் தொடர்ந்து, சாராஹான் மற்றும் சிம்லாவில் தலா 4 செ.மீ, மழைப் பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மண்டி மாவட்டத்தின் செராஜ் மற்றும் தரம்பூர் பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அங்குப் பல மேக வெடிப்புகள் வீடுகள், வயல்கள், உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியுள்ளன. நடந்து வரும் பேரழிவில் குறைந்தது 110 பேர் காயமடைந்ததாக அவர் கூறினார்.

ஒரு குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கையாக, வீடுகள் அடித்துச்செல்லப்பட்ட, மோசமாக இடிந்துவிழந்த வீடுகள் உள்ளிட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து மாதத்திற்கு ரூ.5,000 வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

The India Meteorological Department has issued a red alert for very heavy rain in Himachal Pradesh.

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம்... மேலும் பார்க்க

அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை: துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் யாத்திரைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமை என்று மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தொடங்கி ஆகஸ்... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியா... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி ... மேலும் பார்க்க