செய்திகள் :

டென்னிஸ் ராக்கெட் இழைநார்களினால் தோல்வி..! எம்மா ரடுகானு விரக்தி!

post image

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் மூன்றாவது சுற்றில் தோல்வியுற தனது டென்னிஸ் - ராக்கெட்டின் இழைநார்கள் (strings) கோளாறாக இருந்தது ஒரு காரணம் என எம்மா ரடுகானு கூறியுள்ளார்.

மகளிர் ஓபன் பிரிவில் 3-ஆவது சுற்றில் உலகின் நம்.1 வீராங்கனையாக சபலென்காவும் இங்கிலாந்தின் நம்.1 வீராங்கனை எம்மா ரடுகானுவும் மேல்தளம் மூடப்பட்ட சென்டர் கோர்ட்டில் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் சபலென்கா 7-6 (6) 6-4 என த்ரில் வெற்றி பெற்றார்.

இதில் எம்மா ரடுகானு தோல்வியுற்றாலும் பெரும்பாலும் வெற்றிபெறும் இடத்திலிருந்து சில மில்லி மீட்டர்களில் தோல்வியுற்றார். இந்தத் தோல்வி குறித்து எம்மா ரடுகானு பேசியதாவது:

இறுக்கமான இழைநார்களினால் விரக்தியடைந்தேன்

பந்துகள் அதிகமாக பறந்ததாக உணர்ந்தேன். எனது அனைத்து டென்னிஸ் ராக்கெட்டுகளும் போட்டிக்காக புதியதாக இழைநார்களை பின்னக் கொடுத்திருந்தேன்.

ராக்கெட்டில் இழைநார்கள் இறுக்கமாக பின்னப்பட்டதாதயார் செய்யப்பட்டிருந்தது. அது இந்தப் போட்டிக்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்துவிட்டது.

திடலில் கூரை மூடப்பட்டிருந்ததால் அப்படி மாறியிருக்கலாம். நான் 2 ராக்கெட்டுகளின் கம்பிகளை தளர்வாக அமைக்கும்படி அனுப்பினேன்.

அவர்கள் அதை மாற்றுவதற்கு 20 நிமிடங்கள் ஆகின. இருந்தும் எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு இதெல்லாம் விரக்தியை உண்டாக்கியது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. நான் சரியாக விளையாடியிருக்க வேண்டும் என்றார்.

Emma Raducanu of Britain waves as she leaves the court after losing to Aryna Sabalenka.
பார்வையாளர்களின் பாராட்டில் எம்மா ரடுகானு...

எம்மா ரடுகானுவின் சிறப்பான ஆட்டத்துக்கு திடலில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைதட்டினார்கள்.

Emma Raducanu expressed frustration with having to get a couple of her rackets re-strung during her third-round loss to top-ranked Aryna Sabalenka at Wimbledon.

திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவம்: ஜூலை 7ல் கொடியேற்றம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான ஆனி மாத பிரம்மோற்சவம் ஜூலை 7-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நட... மேலும் பார்க்க

எம்மா ரடுகானு கூறுவது உண்மைதான்... 2023-இன் அனுபவம் பகிர்ந்த சபலென்கா!

விம்பிள்டன் தோல்விக்கு எம்மா ரடுகானு கூறிய காரணத்துக்கு சபலென்காவும் ஆமோதித்துள்ளார். விம்பிள்டன் மகளிர் ஓபன் பிரிவில் 3-ஆவது சுற்றில் உலகின் நம்.1 வீராங்கனையாக சபலென்காவும் இங்கிலாந்தின் நம்.1 வீராங்... மேலும் பார்க்க

100 நாடுகளில் வெளியாகும் கூலி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்... மேலும் பார்க்க

மாரீசன் வெளியீட்டுத் தேதி!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தி... மேலும் பார்க்க

அனுஷ்காவின் காதி வெளியீடு ஒத்திவைப்பு!

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் வ... மேலும் பார்க்க