`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின...
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி விபத்தில், 70 சதவிகித தீக்காயங்களுடன் படுகாயமடைந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 5) பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இன்று காலை நிலவரப்படி விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், மருந்து ஆலையில் மாயமான 9 பேரை தேடி வருகின்றனர். இத்துடன், பலியானோர் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
The death toll in the explosion at a pharmaceutical factory in Sangareddy district of Telangana has reportedly risen to 40.