செய்திகள் :

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

post image

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 மணியளவில் நாட்டு வெடி குண்டு திடீரென வெடித்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டின் உள்ளே இருந்து ஒரு எரிந்த உடலை மீட்டனர். மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில், ​​உள்ளூர் சமூக விரோதி ஒருவர், நாட்டு வெடிகுண்டுகளை வீட்டிற்குள் தயாரிப்பதற்காக ஒரு கும்பலை அழைத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடு வெடிகுண்டு தயாரிக்கும் மையமாக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டு குண்டுகளை தயாரிப்பதற்காக சமூக விரோதிகள் அடிக்கடி வந்து செல்லும் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

One person was killed and another was injured in a crude bomb explosion in West Bengal's Purba Bardhaman district, police said on Saturday.

கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு! உலக வங்கிக்கு எதிராக மத்திய அமைச்சர் பேச்சு!

இந்தியாவில் வருமான சமத்துவம் முன்னேறி வருவதாக உலக வங்கி அறிக்கைக்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் ... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க