செய்திகள் :

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்! - ஜி.கே. மணி

post image

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

அன்புமணி, திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் இருந்த பாமக தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் உருவாக்கியுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி,

"பாமகவில் அனைவரும் குழப்பமடைந்து மன வேதனையில் இருக்கிறோம். இது மாற வேண்டும். பழைய நிலைமைக்கு கட்சி வர வேண்டும். அதுதான் அனைவரின் விருப்பமும். அதற்கு ராமதாஸும் அன்புமணியும் ஓரிடத்தில் அமர்ந்து மனம் விட்டு பேசி தீர்வு காண வேண்டும்.

கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மன உளைச்சலில் உள்ளோம். இருவரும் மனம் விட்டுப் பேசினாலே தீர்வு கிடைக்கும். இருவரும் சேர்ந்தால் நல்லது, இல்லையெனில் பாமக நலிவடைந்து விடும். பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு எந்த கட்சியும் காரணம் அல்ல" என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து, ராமதாஸ் தலைமையில் பாமக செயற்க்குழு கூட்டம் வரும் 8-ம் தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMK G.K. Mani has said that everyone in the PMK is in mental anguish.

தவெக ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!

மீண்டும் முழு கொள்ள‌ளவை எட்டியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் நடபாண்டில் இரண்டாவது முறையாக 120 அடி எட்டியது.மேட்டூர் அணை வரலாற்றில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவு 120 அடியை கடந்த 29 ஆம் ... மேலும் பார்க்க

சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் சிவசங்கர்

ஏழை - எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.கோவை கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை- தொல். திருமாவளவன்

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், பாமக இரண்டா... மேலும் பார்க்க

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் என்று கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ... மேலும் பார்க்க

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தே... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க