செய்திகள் :

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை- தொல். திருமாவளவன்

post image

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், பாமக இரண்டாக பிரிய வாய்ப்பில்லை. அப்பாவும், மகனும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து தேர்தலை ஒன்றாக சந்திப்பார்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு தாமதமாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இருந்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

அதிமுக கூட்டணியில் முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் தான் முடிவெடுக்கப்படும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். அதற்கு அந்த கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுக பொதுச்செயலர் எடப்பாடிதான் கருத்துக் கூற வேண்டும். திமுக, பாஜகவை கொள்கை எதிரி என கூறும் விஜய், அதிமுகவை பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா என கேள்வி எழுகிறது. அதற்கு விஜய் பதில் கூற வேண்டும்.

பா.ஜ.க தான் சிவசேனையை உடைத்தது. மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அவர்கள் உடைப்பார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமல்லாமல் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அவர்கள் பிரிப்பார்கள். இந்த நிலையில் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே மாநில உரிமைகளுக்காக காலம் தாழ்ந்தாவது இணைந்துள்ளார்கள் என்றால் அதை வரவேற்கிறேன். கச்சத்தீவு குறித்து ஒன்றிய ஆட்சியாளர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கச்சத்தீவு தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட தேசத்திற்கு எதிரான கருத்து. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் கலாசார உரிமையை மீட்டுத் தர இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும். அஜித் குமார் கொலை விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்துத்துள்ளார்.

அவரின் தாயாரின் வருத்தம் தெரிவித்துள்ளார். வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளார். இது சற்று ஆறுதல் தருகிறது. இருந்த போதும் இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் வழக்கம் போல் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது என அரசியல் அணுகுமுறைகளையே கையாள்கிறார்கள் என்றார்.

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

Thol. Thirumavalavan says There is no possibility of the PMK splitting into two.

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் என்று கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ... மேலும் பார்க்க

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தே... மேலும் பார்க்க

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்! - ஜி.கே. மணி

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி, திலகபா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல்!

மடப்புரத்தில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலில் நகை காணாமல... மேலும் பார்க்க

கன்னட மொழி குறித்த கருத்துகளை வெளியிட கமல்ஹாசனுக்கு இடைக்காலத் தடை!

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.கன்னட மொழி தொடர்பான விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத... மேலும் பார்க்க