செய்திகள் :

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல்!

post image

மடப்புரத்தில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலில் நகை காணாமல் போன விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு தற்போது வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(சனிக்கிழமை) அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாய் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவர் ரூ. 2 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், "காவல்துறை, விசாரணை என்ற பெயரில் மிக கொடுமையான அச்சுறுத்தலை, கொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள். மருத்துவ அறிக்கை மூலமாக இது உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில்தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. காவலர்களே அத்துமீறி சட்டத்தின்படி நடக்காமல் அதிகார வரம்பு மீறி நடந்துகொள்கின்றனர்" என்று தெரிவித்தார்.

Former CM O Paneerselvam consoles Ajith Kumar's family who died in police custody

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை- தொல். திருமாவளவன்

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், பாமக இரண்டா... மேலும் பார்க்க

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் என்று கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ... மேலும் பார்க்க

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தே... மேலும் பார்க்க

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்! - ஜி.கே. மணி

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி, திலகபா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

கன்னட மொழி குறித்த கருத்துகளை வெளியிட கமல்ஹாசனுக்கு இடைக்காலத் தடை!

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.கன்னட மொழி தொடர்பான விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத... மேலும் பார்க்க