செய்திகள் :

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

post image

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

வருமானத்தில் சமத்துவத்தையும் குறிக்கும் குறியீடான கினி (Gini) மதிப்பெண்கள், இந்தியாவுக்கு 25.5 என்ற நிலையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் 41.8 என்றும், சீனாவில் 35.7 என்றும் உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து நூறு வரையில் மதிப்பிடப்படும் கினியானது, 100 என்ற நிலையில் இருந்தால், அது தீவிர சமத்துவமின்மையைக் குறிக்கும். அதுமட்டுமின்று, ஜி7 மற்றும் ஜி20 நாடுகளைவிடவும் இந்தியா முன்னணியில் உள்ளது.

இருப்பினும், முதலிடத்தில் 24.1 சதவிகிதத்துடன் ஸ்லோவாக் குடியரசும், இரண்டாம் இடத்தில் 24.3 சதவிகிதத்தில் ஸ்லோவேனியாவும், மூன்றாம் இடத்தில் 24.4 சதவிகிதத்துடன் பெலாரஸும் உள்ளது. அதற்கு நான்காம் இடத்தில் 25.5 சதவிகிதத்துடன் இந்தியா உள்ளது.

இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதைக் காட்டுகிறது.

2011-ல் 28.8-ஆக இருந்த இந்தியாவின் கினி, 2022-ல் 25.5 என்று உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் வருமான இடைவெளிகளைக் குறைப்பதைக் காட்டுகிறது.

2011 - 23 இடையில் 17.1 கோடி இந்தியர்கள், தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக உலக வங்கி தெரிவித்தது. 2011-ல் 16.2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2022-ல் 2.3 சதவிகிதமாகக் குறைந்தது.

India ranks as the world’s 4th most equal society

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க