கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரே...
யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!
இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்று (ஜூலை 5) நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். ஆயுஷ் மாத்ரே 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, வைபவ் சூர்யவன்ஷியுடன் விஹான் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 52 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவரது விக்கெட்டினை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடியதைப் போன்று நான்காவது போட்டியிலும் சூர்யவன்ஷி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Vaibhav Suryavanshi impressed with a stunning century in the 4th Under-19 ODI against England.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்!