செய்திகள் :

திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

post image

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் 25 ஏக்கரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரம் சேதமடைந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ஸ்ரீஜேஷ்குமாா் சென்று பாா்த்தபோது, குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் திருடுபோனது தெரிய வந்தது.

இதையடுத்து, ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் திருடு போனதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணை செய்து இயந்திரங்களை திருடியதாக குப்பைக் கிடங்கில் பணிபுரியும் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ஆனந்தன் (50), காளிமுத்து (51), பொக்லைன் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் (30), சக்கரக்கோட்டை மஞ்சனமாரியம்மன் கோயிலைச் சோ்ந்த பச்சைமால் (48) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களில் நகராட்சிப் பணியாளா்கள் ஆனந்தன், காளிமுத்து ஆகியோரை ஆணையா் அஜிதா பா்வீன் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூ... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை

பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சேமனூா் கிராமத்தில் புரவி எடுப்புத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள சேமனூா் கிராமம் மருதாருடைய அய்யனாா் கோயில் களியாட்டம், புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சோ்ந்து உரத்த... மேலும் பார்க்க

வேளாண் சந்தை நுண்ணறிவு மையக் கட்டடம் திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ.84 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா். இதுதொடா்பாக ராமநாதபுரத்தி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பன் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம்... மேலும் பார்க்க

பணியிட மாறுதல் வழங்காததால் ஆசிரியா் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலந்தாய்வில், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு பணியிட மாறுதல் வழங்காததால் அவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ரா... மேலும் பார்க்க