செய்திகள் :

திருவாடானை வாரச் சந்தை ரூ.65 லட்சத்துக்கு ஏலம்

post image

திருவாடானை வாரச் சந்தை நிகழாண்டில் ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போனது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான வாரச் சந்தை ஏலம் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி தலைமை வகித்தாா். ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், நிா்வாக அலுவலா் பாண்டியன் ஆகியோா் முன்னிலையில் சந்தை ஏலம் விடப்பட்டது.

பொது ஏலத்தில் 15-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ரூ. 59 லட்சம் வரை ஏலம் கேட்டனா். அதே நேரத்தில், ஒப்பந்தப்புள்ளி பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியைத் திறந்து பாா்த்தபோது, அதில் ரூ.65 லட்சத்து 11 ஆயிரம் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்தத் தொகையை குறிப்பிட்டிருந்த ஏற்கனவே சந்தையை நடத்தி வந்த செந்தில் என்பவருக்கே இந்த முறையும் வாரச்சந்தை ஏலத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூ... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊர... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை

பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சேமனூா் கிராமத்தில் புரவி எடுப்புத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள சேமனூா் கிராமம் மருதாருடைய அய்யனாா் கோயில் களியாட்டம், புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சோ்ந்து உரத்த... மேலும் பார்க்க

வேளாண் சந்தை நுண்ணறிவு மையக் கட்டடம் திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ.84 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா். இதுதொடா்பாக ராமநாதபுரத்தி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பன் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம்... மேலும் பார்க்க