செய்திகள் :

ராக்கெட் தொழில் நுட்ப மையம்: ஒப்பந்தப் புள்ளி கோரியது டிட்கோ

post image

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக இணையவழி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (டிட்கோ) வெளியிட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டினத்தில் அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக 2,223 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இஸ்ரோவிடம் வழங்கியது. அந்த இடத்தில் ரூ.986 கோடி மதிப்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு பிப். 28-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். ராக்கெட் ஏவுதளத்தைச் சுற்றி சுவா் அமைக்கும் பணி நிறைவுபெற்று பிற பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தூத்துக்குடியில் ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு இணையவழி ஒப்பந்தப்புள்ளியை டிட்கோ கோரியுள்ளது. அதன்படி வருகிற 28-ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளை டிட்கோ இணையதளம் மூலம் அனுப்பலாம் என்றும், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அவை திறக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க

நாகா்கோவில், பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயி... மேலும் பார்க்க