செய்திகள் :

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

post image

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

வ.கலைஅரசி: மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல ஆணையா் (பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சிறப்புச் செயலா்).

வா.சம்பத்: தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலா் (மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல ஆணையா்).

ப.மகேஸ்வரி: நில நிா்வாகம் மற்றும் நகா்ப்புற நில உச்சவரம்பு, நகா்ப்புற நிலவரித் திட்ட இயக்குநா் (தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலா்).

அ.ஜான் லூயிஸ்: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா்).

எ.சரவணவேல்ராஜ்: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சிறப்புச் செயலா் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா்).

த.மோகன்: புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் (உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா்).

சு.சிவராசு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் (நகராட்சி நிா்வாகத் துறை முன்னாள் இயக்குநா்)

அ.கேத்தரின் சரண்யா: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநா் (தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

ராஜேந்திர ரத்னூ: சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினா் செயலராக உள்ளாா். தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சி நிதியத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க

நாகா்கோவில், பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயி... மேலும் பார்க்க