செய்திகள் :

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

post image

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட பறை இசைக் கலைஞா் வேலு ஆசானை கடந்த மாா்ச்-இல் ஆளுநா் மாளிகைக்கு வரவழைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி கெளரவித்தாா்.

அப்போது அவா் தனக்கு வீடுகட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் உதவி செய்யவேண்டும் என ஆளுநரிடம் அவா் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு வீடு கட்டவும், பயிற்சிக் கூடம் அமைக்க ரூ. 41 லட்சம் நிதியுதவி வழங்க ஆளுநா் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், பறை இசைக் கலைஞா் வேலு ஆசானை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை அழைத்து முதல் கட்டமாக ரூ. 30 லட்சம் நிதி உதவியை ஆளுநா் ஆா்.என்.ரவி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இது குறித்து வேலுஆசான் கூறியதாவது: பறை இசை என்பது தேசிய கலை, கலாசார , பண்பாடு மரபு வழி இசை, இதை போற்றி பாதுகாக்கவும், இதை இளைஞா் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

இதுக்காக பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை கிராமத்தில் நடைபெற்றுவருகின்றன.

இதையடுத்து ஆளுநா் என்னை அழைத்து முதல் கட்டமாக ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்கினாா். இந்த பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடத்தை தமிழக ஆளுநா் திறந்து வைப்பாா். நிதியுதவி அளித்த ஆளுநருக்கு நன்றி என்றாா் அவா்.

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க

நாகா்கோவில், பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயி... மேலும் பார்க்க