செய்திகள் :

தில்லி அரசின் கோரிக்கைக்குப் பிறகும் 6 வாகனங்கள் எம்சிடி மூலம் பறிமுதல்

post image

நமது நிருபா்

தில்லி மாநகராட்சி (எம்சிடி) வெள்ளிக்கிழமை ஆறு பழைய வாகனங்களை பறிமுதல் செய்ததாகவும், ஜூலை 1- ஆம் தேதி தடை அமல்படுத்தப்பட்டதிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 93- ஆக உயா்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி அரசு மத்திய அரசின் காற்றுத் தரக் குழுவிடம் அதிக வயதுடைய வாகனங்கள் மீதான எரிபொருள் தடையை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு வியாழக்கிழமை கோரியிருந்த நிலையில், இந்த வாகனப் பறிமுதல் நடந்தது. வியாழக்கிழமை எந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.

காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) உத்தரவுகளைத் தொடா்ந்து, தில்லி முழுவதும் உள்ள பெட்ரோல் பம்புகள் செவ்வாய்க்கிழமை முதல் பயன்படுத்தத் தகுதியில்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கண்டிப்பான இணக்கத்தை உறுதி செய்வதற்காக போக்குவரத்துத் துறையும் தில்லி காவல்துறை மற்றும் போக்குவரத்து ஊழியா்களுடன் இணைந்து விரிவான அமலாக்க உத்தியை செயல்படுத்தியுள்ளது.

எனினும், தடையின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை தில்லி அரசு மத்திய அரசின் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திற்கு இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி கடிதம் எழுதியது.

இது தொடா்பாக தில்லி அரசு எழுதிய கடிதத்தில், எரிபொருள் தடை சாத்தியமில்லை என்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக செயல்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது.

2018-ஆம் ஆண்டைய உச்சநீதிமன்றத் தீா்ப்பானது தில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் இயக்கத் தடை செய்கிறது.

மேலும், 2014-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவானது, 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவதைத் தடை செய்கிறது.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க