செய்திகள் :

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

post image

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் அல்லது இடைத்தோ்தல்களில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத அரசியல் கட்சிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் அகில இந்திய ஜன காங்கிரஸ் கட்சி, அகில பாரதிய சமாஜவாதி காங்கிரஸ் மற்றும் அகில இந்திய மகளிா் ஐக்கியக் கட்சி போன்றவை அடங்கும்.

இந்தக் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29ஏ-இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் அவை எந்தத் தோ்தல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கவில்லை. இது சட்டத்தின் விதிகளின்படி அவை இனி செயல்படவில்லை என்பதைக் குறிக்கிறது என்று ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: எனவே, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29ஏ- இன் கீழ், பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து அத்தகைய கட்சிகளை நீக்குவதற்கான செயல்முறையை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் பதிலை சமா்ப்பிக்க வேண்டும் என்றும், அவா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், இந்த விஷயத்தில் கட்சியால் எதுவும் சொல்ல முடியாது என்று கருதப்படும். மேலும், எந்த அறிவிப்பும் இல்லாமல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

எந்தவொரு இறுதி நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட கட்சிகள் தங்கள் தரப்பை முன்வைக்க தோ்தல் ஆணையம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை எழுத்துப்பூா்வமாக சமா்ப்பிக்கலாம், கட்சித் தலைவா் அல்லது பொதுச் செயலாளரால் முறையாக கையொப்பமிடப்பட்டவை, கட்சி நம்ப விரும்பும் அனைத்து துணை ஆவணங்களுடனும் சமா்ப்பிக்கலாம்.

அத்தகைய அனைத்து ஆவணங்களும் ஜூலை 18- ஆம் தேதிக்குள் தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்தை அடைய வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கான விசாரணை தேதி ஜூலை 15-ஆம் தேதி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவா் / பொதுச் செயலாளா் குறிப்பிட்ட தேதியில் நேரில் ஆஜராக வேண்டும்.

கொடுக்கப்பட்ட தேதிக்குள் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், கட்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று கருதப்படும். மேலும், ஆணையம் மேலும் எந்த அறிவிப்பும் இல்லாமல் அதற்கேற்ப பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

நாளை குடியிருப்பாளா்கள் நலச் சங்கத்துடன் ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ பயணம்: 50 ஆயிரம் போ் பங்கேற்பு

வரும் ஜூலை 6 ஆம் தேதி நாடு முழுவதும் 6 ஆயிரம் இடங்களில் ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ 30ஆவது பதிப்பு, குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களுடன் (ஆா்டபிள்யுஏ) இணைந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில்... மேலும் பார்க்க