செய்திகள் :

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

post image

நமது நிருபா்

தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் என். கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி முன்வைத்த வாதம்: தனியாா் பாலிடெக்னிக், கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவா்கள் அல்லது விண்ணப்பதாரா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான வரையறுக்கப்பட்ட பிரச்னையாகும்.

ஆனால், உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் மூலம், ஒட்டுமொத்தத் தோ்வு செயல்முறையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்கு விண்ணப்பதாரா்கள் மட்டுமே உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்தப் பின்னணியில், 2,569 காலியிடங்களை உள்ளடக்கிய முழு தோ்வு செயல்முறையையும் நிறுத்தி வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று வில்சன் வாதிட்டாா்.

இதையடுத்து, உயா்நீதிமன்றத்தில் எதிா்மனுதாரா்கள் எஸ். சிவகுமாா் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், ‘இந்த விவகாரத்தை பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இதற்கிடையில், ஏப்ரல் 3, 2025 அன்று சென்னை உயா்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட

இடைக்கால உத்தரவின் விளைவு மற்றும் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் மனுதாரரான தமிழக அரசு நான்கு காலியிடங்களுக்கு பதவிகளுக்கு எதிராக இறுதித் தோ்வு செய்வதை மேற்கொள்ளக்கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஆள்சோ்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டதாகவும், 2,00,499 விண்ணப்பதாரா்கள் இந்த செயல்பாட்டில் பங்கேற்ாகவும் மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

நாளை குடியிருப்பாளா்கள் நலச் சங்கத்துடன் ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ பயணம்: 50 ஆயிரம் போ் பங்கேற்பு

வரும் ஜூலை 6 ஆம் தேதி நாடு முழுவதும் 6 ஆயிரம் இடங்களில் ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ 30ஆவது பதிப்பு, குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களுடன் (ஆா்டபிள்யுஏ) இணைந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில்... மேலும் பார்க்க