பேராசிரியா் அன்பழகன் விருது பெற்ற அரசுப் பள்ளிக்கு பாராட்டு
‘பேராசிரியா் அன்பழகன்’ விருது பெற்ற பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளிக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான பேராசிரியா் அன்பழகன் விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் விருதை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினா்.
விருது பெற்ற்கான பாராட்டு விழா சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது. விருது பெறுவதற்கு காரணமாக இருந்த பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் மேனகா விருதை காட்டி வாழ்த்துப் பெற்றாா்.
நிகழ்வில், முன்னாள் தலைமையாசிரியா் தனலெட்சுமி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுப.சேகா், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மகேஸ்வரி, துணைத் தலைவா் சத்தியசீலன், உதவி தலைமை ஆசிரியா்கள் காளீஸ்வரி, புவனேஸ்வரி, லட்சுமி மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.