செய்திகள் :

தஞ்சாவூா் அருகே ஹிந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

post image

தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் மத நல்லிணக்கமாக ஹிந்துக்களும் இணைந்து மொஹரம் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

இஸ்லாமியா்களின் தொடக்க மாதமான மொஹரம், மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியா்கள் மட்டுமே கொண்டாடுவா்.

இந் நிலையில், தஞ்சாவூா் அருகே ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை கிராம விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு மொஹரம் பண்டிகையையொட்டி இக்கிராமத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாள்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினா்.

அங்குள்ள பள்ளிவாசலிலும், அக்கிராமத்தில் உள்ள வீடுகளிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டு, ஒலிபெருக்கிகள் மூலம் இஸ்லாமிய பாடல்கள் ஒலிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ‘பஞ்சா’ எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொரு வீட்டினரும் கரகத்துக்குத் தண்ணீா் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை சாத்தி வழிபட்டனா்.

பின்னா், ‘பஞ்சா’ கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் (தீமிதி) இறங்கி வழிபட்டனா். விபூதி மற்றும் எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பெண்கள் புதிய மண் கலயம் அல்லது புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனா்.

இக்கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்ததாகவும், அது அல்லாவின் கையாகக் கருதி கோயில் அமைத்து வழிபட்டு வருவதாகவும், ஏறத்தாழ 300 ஆண்டுகளாக மதம், இனம் கடந்து மொஹரம் பண்டிகை கொண்டாடி வருவதாகவும் அக்கிராமத்தினா் தெரிவித்தனா்.

தஞ்சாவூரில் நாளை மின் தடை

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என்றாா் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தஞ்... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இருவா் தற்கொலை!

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இரண்டு போ் தற்கொலை செய்து கொண்டனா். பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சோ்ந்த நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே அா்ச்சனை கடை நடத்திவரும் சாத்தப்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் தம... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம்!

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலமாக முதியோா் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. ... மேலும் பார்க்க

வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தையால் சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்!

ஒரத்தநாடு அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா். வருவாய்த் துறையினரின் பேச்சுவாா்த்தையால் சாலை மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ... மேலும் பார்க்க