செய்திகள் :

மதுரை: ``தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு; சட்டம் கொண்டு வர வேண்டும்'' - மமக மாநாட்டில் தீர்மானம்

post image

'வக்பு திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்' என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதுரையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநாடு மதுரை மஸ்தான்பட்டி பகுதியில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

ஜவாஹிருல்லா

தீர்மானங்கள் :

1) உலகில் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் என அனைத்து தளங்களிலும் சிறுபான்மையினை சமுதாயங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வாக இருக்கிறது.

ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சட்டம் இயற்றும் மன்றங்களில் முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டு வருகிறது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், 24 முஸ்லிம்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்த எம்பிக்களில் இது 4.4 சதவிகிதம் மட்டுமே. இது முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. இந்தியா முழுவதும் உள்ள 4123 சட்டமன்ற உறுப்பினர்களின் வெறும் 296 பேர் மட்டுமே முஸ்லீம்கள். உள்ளாட்சிகளிலும் இன்னும் பரிதாப நிலையே நிலவுகிறது. எனவே அரசியல் அதிகாரத்தை செயல்படுத்தும், சட்டம் இயற்றும் மன்றங்களில், உள்ளாட்சி மன்றங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தர அனைத்து கட்சிகளும் உடனே கொள்கை முடிவை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

2) வக்பு திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடுத்து விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக மக்கள் விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் அந்தச் சட்டத்தை வலிமையாக எதிர்த்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. உள்ளிட்ட தீர்மானங்களுடன்,

கலந்து கொண்டவர்கள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடைபெறும் தேர்தல் முறை மக்களாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும், இந்திய அரசு தனது இஸ்ரேல் ஆதரவு போக்கை கைவிட்டு, இந்தியாவில் இயங்கும் இஸ்ரேல் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப்தன்கர் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து மதச்சார்பன்மை, சமூகவுடமை ஆகிய சொற்களை நீக்க வேண்டும் என்று பேசியது வேதனைக்குரிய செயல் என்றும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக பாட நூல்களில் பாசிச ஊடுருவல்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், தனியார் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும்,

புழல் சிறையில் விசாரணை கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டிப்பதாகவும், நீண்ட கால விசாரணை கைதிகளுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை மாற்ற முயல்வது சட்டவிரோதமான செயல், சிக்கந்தர் தர்காவை காப்பாற்றவும், அங்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் மலைப்பாதையை செப்பனிடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

``முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தது..'' - ஆர்.பி.உதயகுமார் சொல்லும் கணக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் அ.தி.மு.க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவ... மேலும் பார்க்க

``அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல'' - முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன.இப்போதைக்கு தி.ம... மேலும் பார்க்க

``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்... மேலும் பார்க்க

``அரசுப் பணிகளில் திமுக ஐ.டி விங் நபர்களைச் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி'' - இபிஎஸ் கண்டனம்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தி.மு.க ஐ.டி விங் சேர்ந்தவர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு கண்டனம்... மேலும் பார்க்க

Bihar: ``மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் காந்தி படம்'' -காங்கிரஸை விமர்சித்த பாஜக

பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

Taliban: தாலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா! - காரணம் தெரியுமா?

ஆஃப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், தாலிபான் அரசு பல நாடுகளுடன் உயர்மட்டப் பே... மேலும் பார்க்க