செய்திகள் :

``முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தது..'' - ஆர்.பி.உதயகுமார் சொல்லும் கணக்கு

post image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் அ.தி.மு.க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தது குறித்து விஜய்யிடம்தான் கேட்க வேண்டும், எங்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்வது?

ஆர்.பி உதயகுமார் - விஜய்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் தொடஙகும்போது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

இதற்கு முன்பே கோரிக்கையாக வைத்தோம், அவர் வீட்டிற்கு பல முறை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது, பலமுறை உயிருக்கு அச்சுறுத்தல் வந்தது. அவரை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை, இந்த அறிவிப்பை 8 கோடி தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி தெளிவான தேர்தல் வியூகம் அமைத்துள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என சொல்பவர்கள் 80 சதவிகிதம், தொடர வேண்டும் என சொல்பவர்கள் 20 சதவிகிதம் பேர். ஆனால் 80 சதவிகிதம் பேர் தனித்தனியாக குரல் எழுப்புவதால் ஸ்டாலின் அதில் குளிர் காய்கிறார்.

இந்த 80 சதவிகிதம் பேர் ஒன்றாக இணைந்தால் மக்கள் எண்ணங்களும் நிறைவேறும், எதிர்ப்பு குரல் எழுப்பும் அனைத்து கட்சிகளின் எண்ணங்களும் நிறைவேறும். அதனால் தான் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக தெளிவான தேர்தல் வியூகம் அமைத்துள்ளார். விளம்பரத்தை நம்பியிருக்கும் திமுகவினர், வாக்குகள் சிதறுவதால் இப்போது 30 சதவிகிதம் வாக்காளர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

மக்கள் நம்பிக்கை இழந்த காரணத்தினால் அவரே தெருவில் இறங்கி ஒவ்வொரு மாவட்டச்செயலாளரிடமும் நீங்கள் எத்தனை பேரை சேர்த்தீர்கள் என கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்தப்போவதாக செய்தி வருகிறது. உங்கள் மாவட்டத்தில், உங்கள் வீட்டில், உங்கள் ஸ்டாலின் என சொல்கிறார்கள் சொல்வதோடு சரி அவ்வளவுதான், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் மாபெரும் வரலாற்றை உருவாக்கும்" என்றர்.

மதுரை: ``தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு; சட்டம் கொண்டு வர வேண்டும்'' - மமக மாநாட்டில் தீர்மானம்

'வக்பு திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்' என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதுரையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் க... மேலும் பார்க்க

``அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல'' - முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன.இப்போதைக்கு தி.ம... மேலும் பார்க்க

``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்... மேலும் பார்க்க

``அரசுப் பணிகளில் திமுக ஐ.டி விங் நபர்களைச் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி'' - இபிஎஸ் கண்டனம்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தி.மு.க ஐ.டி விங் சேர்ந்தவர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு கண்டனம்... மேலும் பார்க்க

Bihar: ``மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் காந்தி படம்'' -காங்கிரஸை விமர்சித்த பாஜக

பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

Taliban: தாலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா! - காரணம் தெரியுமா?

ஆஃப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், தாலிபான் அரசு பல நாடுகளுடன் உயர்மட்டப் பே... மேலும் பார்க்க