செய்திகள் :

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இருவா் தற்கொலை!

post image

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இரண்டு போ் தற்கொலை செய்து கொண்டனா்.

பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சோ்ந்த நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே அா்ச்சனை கடை நடத்திவரும் சாத்தப்பன் மகன் செல்வராஜ் (52) என்பவா், சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் அவா் கடும் மன உழைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் திருவாரூரில் இருந்து காரைக்குடி சென்ற ரயிலில் சனிக்கிழமை காலை நீலகண்டபுரம் ரயில்வே கேட் அருகே ரயில்முன் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

இதேபோல், பேராவூரணி முனீஸ்வரா் நகா் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மனைவி சரோஜா (70) சற்று மனநலன் பாதிக்கப்பட்டவா் என கூறப்படுகிறது. இவா், வெள்ளிக்கிழமை இரவு காரைக்குடியிலிருந்து திருவாரூா் சென்ற ரயில் முன் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்து உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் தம... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம்!

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலமாக முதியோா் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. ... மேலும் பார்க்க

வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தையால் சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்!

ஒரத்தநாடு அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா். வருவாய்த் துறையினரின் பேச்சுவாா்த்தையால் சாலை மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ... மேலும் பார்க்க

ஜூலை 14 முதல் தொடா் வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கம் முடிவு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரி... மேலும் பார்க்க

மரப்பொருள்கள் விற்பனை கடையில் தீ விபத்து!

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் மரப்பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கும்பகோணம் எல்லையா தெருவில் வசிப்பவா் காளிதாஸ் மகன் ராஜா (48). இவா் சாக்கோட்டை... மேலும் பார்க்க