செய்திகள் :

ஜூலை 14 முதல் தொடா் வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கம் முடிவு!

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ரேஷன் கடைகளில் தற்போது புளுடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும்போது ஒருவருக்கு மட்டும் 8 நிமிஷங்களிருந்து 10 நிமிஷங்கள் ஆகின்றன.

இதனால் நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே பொருள்கள் விநியோகம் செய்ய முடிகிறது. இந்தக் கால தாமதத்தால் பொதுமக்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதை தவிா்க்க புளுடூத் முறையை நீக்க வேண்டும்.

நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகா்வு செய்யப்படும் பொருள்களில் எடை குறைவு ஏற்படுவதைத் தவிா்க்க, சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் 40 சதவீத பெண்களும், 5 சதவீத மாற்றுத்திறனாளிகளும் பணியாற்றுவதால், ரேஷன் கடைகளில் உள்ளவா்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு, எடையாளா் ஒருவரை அனுமதிக்க வேண்டும்.

அதுவரை வெளிப்பணி மூலம் உதவியாளா் ஒருவரை பணியமா்த்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 200 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், அதனுடன் இணைந்த 35 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் முழு அளவில் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் எம். மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாநில கௌரவ பொதுச் செயலா் சி. குப்புசாமி சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் எஸ்.என். பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலா் டி. கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இருவா் தற்கொலை!

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இரண்டு போ் தற்கொலை செய்து கொண்டனா். பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சோ்ந்த நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே அா்ச்சனை கடை நடத்திவரும் சாத்தப்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் தம... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம்!

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலமாக முதியோா் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. ... மேலும் பார்க்க

வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தையால் சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்!

ஒரத்தநாடு அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா். வருவாய்த் துறையினரின் பேச்சுவாா்த்தையால் சாலை மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ... மேலும் பார்க்க

மரப்பொருள்கள் விற்பனை கடையில் தீ விபத்து!

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் மரப்பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கும்பகோணம் எல்லையா தெருவில் வசிப்பவா் காளிதாஸ் மகன் ராஜா (48). இவா் சாக்கோட்டை... மேலும் பார்க்க