ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(54). இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார்.
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய இவர் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார்.
இவரது மனைவி பிரமிளா(50). ஆண்டாபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாமக்கல் அருகே வகுரம்பட்டியில் அதிகாலை 5 மணி அளவில், கணவன், மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A regional transport officer and his wife, a government school teacher, committed suicide by front of a train near Namakkal early Sunday morning.
இதையும் படிக்க: சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!