செய்திகள் :

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது: ஜி.கே. வாசன்

post image

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார் என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது.

முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கபட வேண்டும். காவல்துறையை கட்டுபடுத்த முடியாத அரசு உள்ளது. தமிழக அரசின் தவறுகளை, மக்கள் விரோத போக்கை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். வருகின்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் பாடம் புகட்டுவார்கள்.

மக்கள் மீது வரி செலுத்துவது அரசின் வழக்கமாகிவிட்டது‌‌. எதற்கெடுத்தாலும் வரி என்ற நிலை உள்ளது‌. எனவே ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர். அதிமுக - பாஜக - தமாக கூட்டணி மக்களின் நம்பிக்கை பெற்ற கூட்டணியாக உள்ளது. ஒத்த கருத்து உடையவர்கள் ஒருசேர பயணிக்க வேண்டும் என்பதை தமாகவின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுவாக முடிவு எடுப்பது. எடுத்த முடிவை மாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. 24 மணி நேரத்தில் பல முடிவுகள் பல கட்சிகள் அறிவித்திருப்பதை பல தேர்தலில் நாம் பார்த்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலம் இருக்கிறது என்றார்.

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகள் கூடுதல் சீட்டு கேட்பது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, குழப்பம் இல்லாத கூட்டணிக்கு இதுவே சான்று என தெரிவித்தார்.

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

G.K. Vasan has said that there is an unsolvable knot in the Ajith Kumar issue.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க

தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் கொலை வழக்கில் பாமக நிர்வாகி உள்பட மூவர் சரண்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை வழக்கில் மூவர் சரணடைந்தனர்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,... மேலும் பார்க்க

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மை வாய்ந்த இத்த... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்! கோவை நிகழ்ச்சி நிரல்!

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இதன்படி, கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை எடப்பாட... மேலும் பார்க்க