செய்திகள் :

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

post image

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சகோசிங்கா பகுதியில் மொஹரம் பண்டிகைக்கான ஊரவலம் அமைதியான முறையில் நடைபெற்றது. தாகாவில் 400 ஆண்டுகள் பழமையான ஹுஸ்னி தலான் இமாம்பரா மசூதியில் இருந்து அஸிம்பூர், நில்கெட், புதிய மார்க்கெட் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தின்போது அதிக மின்திறன் உடைய கம்பிகள் மீது உரசியதில், காலை 11. 30 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மாவட்ட காவல் துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ், ''ஷியா பிரிவு முஸ்லிம்கள் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர். இதில், எதிர்பாராத விதமாக ஊர்வலம் எடுத்துச்சென்ற தாசியா என்ற அலங்கரிக்கப்பட்ட வாகனம் மின்கம்பிகள் மீது உரசியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

மொஹரம் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

One dead, three injured due to electrocution in Jharkhand's Giridih district

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிம் பயிற்சியாளா் கைது: நொய்டாவில் சம்பவம்

நொய்டாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிம் பயிற்சியாளா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்ப... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: பிரதமரை வரவேற்ற குட்டி இதயங்கள்...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பிரேசில் சென்றுள்ளார்ரியோ டி ஜெனீரோ நகரில் பிரதமரை வரவேற்க திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரேசிலுக்குச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு...... மேலும் பார்க்க

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சீர்திருத்தம் குறித்து இன்று (ஜூலை 6) உரையாற்றினார். அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது. வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் த... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க