செய்திகள் :

Gill : 'நான் அடிச்சு சீரிஸையே ஜெயிக்கணும்!' - வெற்றிக்குப் பின் கில் உறுதி!

post image

'இந்தியா வெற்றி!'

பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதத்தையும் இரண்டாம் இன்னிங்ஸில் சதத்தையும் அடித்த கேப்டன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

Gill
Gill

'கில் ஆட்டநாயகன்!'

கில் பேசியதாவது, 'முதல் போட்டியின் தோல்விக்குப் பிறகு நாங்கள் என்னவெல்லாம் பேசினோமோ அதையெல்லாம் சரியாக களத்தில் செயல்படுத்தியிருக்கிறோம். எங்களுடைய பந்துவீச்சும் பீல்டிங்கும் அற்புதமாக இருந்தது. இந்த மாதிரியான பிட்ச்களில் 400-500 ரன்களை எடுத்துவிட்டால் நம்மால் ஆட்டத்தில் நிலைத்திருக்க முடியும் என தெரியும்.

கடந்த போட்டியில் தவறவிட்டதைப் போல எல்லா போட்டியிலும் அத்தனை கேட்ச்களை ட்ராப் செய்யமாட்டோம். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் ஆகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்திய விதம்தான் முக்கியமானதாக இருந்தது. பிரஷித் கிருஷ்ணா விக்கெட்டே எடுக்கவில்லையென்றாலும் நன்றாக வீசியிருந்தார்.

Gill
Gill

ஆகாஷ் தீப் முழு முயற்சியோடு இதயப்பூர்வமாக சிரத்தையெடுத்து வீசியிருந்தார். இப்போது ரொம்பவே சௌகரியமாக உணர்கிறேன். என்னுடைய பேட்டிங் பங்களிப்பால் இந்தத் தொடரை வெல்லும்பட்சத்தில் மகிழ்ச்சியடைவேன். ஒவ்வொரு நாளிலும் எதோ ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறேன். பேட்டிங் ஆடும்போது கேப்டனாக அல்லாமல் ஒரு பேட்டராக மட்டுமே யோசிக்க விரும்புகிறேன். ஒரு கேப்டனாக யோசித்தால் ரிஸ்க் எடுக்க வேண்டிய சில இடங்களில் என்னால் ரிஸ்க் எடுக்க முடியாமல் போகும்.

Team India
Team India

பும்ரா அடுத்தப் போட்டியில் நிச்சயம் ஆடுவார். லார்ட்ஸ், உலகளவில் பிரசித்திப் பெற்ற மைதானம். ஒரு சிறுவனாக லார்ட்ஸில் ஆட வேண்டும் என்கிற கனவு எல்லாருக்கும் இருக்கும். அதிலும் இப்போது லார்ட்ஸில் உங்களின் தேசிய அணியை வழிநடத்தி கேப்டனாக ஆடப்போவதை மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.' என்றார்.

'என் அக்காவுக்காகதான் எல்லாமே...' - கேன்சரால் பாதிக்கப்பட்ட சகோதரி குறித்து உருகிய ஆகாஷ் தீப்!

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.ஆகாஷ்... மேலும் பார்க்க

Eng v Ind : 'அந்த 2 இடத்துலதான் கோட்டை விட்டுட்டோம்!' - தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ்!

'இங்கிலாந்து தோல்வி!'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்க... மேலும் பார்க்க

Liverpool: உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.140 கோடி; ஒப்பந்த தொகையை அப்படியே வழங்கிய அணி!

லிவர்பூல் கால்பந்து அணியின் வீரர் டியாகோ ஜோட்டா சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. 28 வயது போர்த்துகீசிய வீரரான ஜோட்டாவின் மரணம் கால்பந்து வீரர்கள் மற... மேலும் பார்க்க

'குகேஷ் பலவீனமானவர் - கார்ல்சன்; பதிலடி கொடுத்த குகேஷ்!'- கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!

'குகேஷ் வெற்றி...'தமிழக வீரரும் உலக செஸ் சாம்பியனுமான குகேஷ் மீண்டும் ஒரு முறை உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் கார்ல்சனை வீழ்த்தியிருக்கிறார்.Magnus Carlsen vs Gukesh குரோஷியாவின் சாக்ரெப்பில் நடந்த... மேலும் பார்க்க

Gill : 'ஐ.பி.எல் அப்போவே டெஸ்ட் ஆட தயாராகிட்டேன்!' - இரட்டைச் சதத்தின் ரகசியம் சொல்லும் கில்!

'கில் இரட்டைச்சதம்!'இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் ம... மேலும் பார்க்க

Diogo Jota : 'திருமணமான பத்தே நாளில் கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் உயிரிழப்பு!- என்ன நடந்தது?

'கால்பந்து வீரர் மரணம்!'போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டியோகோ யோடா கார் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். Diogo Jotaபோர்ச்சுக்கலை சேர்ந்த 28 வயதான டியோகா யோடா ப்ரீமியர் லீகில் லிவர்பூல் அணி... மேலும் பார்க்க