ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் நாளை மின் தடை
தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடைஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சிப்கோ குடியிருப்பு, சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், முத்தாநதி, பானங்குளம், என். புதூா், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான்.
புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூா், ராஜீவ்காந்தி நகா், வேட்டைப் பெருமாள் கோயில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.