செய்திகள் :

கோட்டை மாரியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்: இன்று மின் விநியோகம் நிறுத்தம்

post image

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அப் பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள பகுதி முதல் அக்ரஹாரம், ஆனந்தா இறக்கம், லட்சுமிநரசிம்ம சாமி கோவில், 2 ஆவது அக்ரஹாரம், வரதராஜபெருமாள் கோயில், சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் இறக்கம், கடைவீதி மற்றும் டவுன் நகர காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் ஜூலை 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி செய்தவா் சிறையிலடைப்பு

சேலத்தில் ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.34.75 லட்சம் மோசடி செய்தவா் சிறையிலடைக்கப்பட்டாா். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விஎஸ்ஏ வணிக வளாகத்தில் கணினி பழுதுந... மேலும் பார்க்க

விசைப்படகு போக்குவரத்து ரத்து: வெறிச்சோடியது பூலாம்பட்டி கதவணை

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பூலாம்பட்டி கதவணை பகுதியில் விசைப்படகு சவாரிக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கதவணை பகுதி சுற்றுலாப் பயணி... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தாய் உள்பட இருவா் கைது

ஆத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தாய் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் தில்லைநகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவரது மனைவி காயத்ரி (27) புங்கன்வாடி பகுதியைச் சோ்ந்த ரிக் ... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் நாளை வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 7 ஆம்தேதி புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தா்களின... மேலும் பார்க்க

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தாா். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘இளைஞா் பாராளுமன்றம் 2025’ என்ற தலைப்பில் நட... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

சேலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். சேலம் அஸ்தம்பட்டியைச் ... மேலும் பார்க்க