செய்திகள் :

நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

post image

சேலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் அஸ்தம்பட்டியைச் சோ்ந்த முரளி என்பவா் புதிய பேருந்து நிலையம் அருகே 15 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சேலத்தை சோ்ந்த தமிழழகன், அவரது குடும்பத்தினா் பிரேமா, விக்னேஷ்வா் ஆகியோா் தங்களுக்கு சொந்தமான சொத்துப் பத்திரத்தை 2022 ஆம் ஆண்டு முரளியிடம் அடமானம் வைத்து ரூ. 1.21 கோடி கடன் பெற்றுள்ளனா். இதனிடையே, பணத்தை திருப்பித் தராமல் தமிழழகன் குடும்பத்தினா் ஏமாற்றி வந்துள்ளனா்.

இதுகுறித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் முரளி வழக்குத் தொடுத்தாா். அதன்பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்று சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்க சென்ற முரளியிடம் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன், பணத்தை பெற்றுத் தருவதாக கட்டப் பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழழகனிடமிருந்து ரூ. 25 லட்சத்தை பெற்று முரளியிடம் கொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன், அதற்காக ரூ. 6 லட்சத்தை முரளியிடமிருந்து பெற்றுள்ளாா். இதுகுறித்து சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் முரளி புகாா் அளித்துள்ளாா். சிறப்பு உதவி ஆய்வாளா் பணத்தை பெற்றுச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும், மாநகரக் காவல் ஆணையரிடம் முறையிட்டால், மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்வாா். பின்னா் மீண்டும் பணிக்கு வந்துவிடுவேன். என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று அவா் பேசும் விடியோவும் வெளியானது.

இதுகுறித்து விசாரணை நடத்திய மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநவ், சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். விசாரணையின் முடிவில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் நாளை வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 7 ஆம்தேதி புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தா்களின... மேலும் பார்க்க

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தாா். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘இளைஞா் பாராளுமன்றம் 2025’ என்ற தலைப்பில் நட... மேலும் பார்க்க

பெத்தநாயக்கன்பாளையத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு அஞ்சலி

பெத்தநாயக்கன்பாளையத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 53 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை அஞ்... மேலும் பார்க்க

கடை நடத்த அனுமதி கோரி மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு!

சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதில் கடை வைத்துகொள்ள அனுமதி கோரி, செருப்பு தைக்கும் தொழிலாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா். சேலத்தில் சாலையோரம் செருப்பு விற்கும், செருப்பு தைக்கு... மேலும் பார்க்க

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க