செய்திகள் :

குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!

post image

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

அதன் படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபிள்கள் தர உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின் படி, ரூ.1,08,595.20 ஆகும்.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ரஷ்யாவின் 10 பகுதிகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், முதன் முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட போது, பெண்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டது. இப்போது பள்ளி மாணவிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

புதின்
புதின்

ஆதரவும், எதிர்ப்பும்!

இந்தத் திட்டத்திற்கு, ரஷ்யாவில் ஆதரவும் கிடைத்துள்ளது... எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு இந்த மாதிரி ஊக்கத் தொகை வழங்கும்போது, அது நெறிமுறைகளைக் குழைக்கும் என்று கூறுகின்றனர்.

புதின் என்ன நினைக்கிறார்?

ரஷ்ய அதிபர் புதினை பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மிக மிக முக்கியம். காரணம், அவர் விரும்பும் ராணுவ பலத்திற்கும், ரஷ்யாவை விரிவுப்படுத்துவதற்கும் இது மிக மிக முக்கியம்.

ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரினால் ரஷ்யாவில் கிட்டத்தட்ட 2.5 லட்ச ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

லட்சக்கணக்கான பேர் ரஷ்யாவில் இருந்து குடி பெயர்ந்துவிட்டனர்.

அதனால், ரஷ்யா அரசு ரஷ்ய மக்கள் தொகையை பெருக்குவது மிக முக்கியம் என்று நினைக்கிறது.

ரஷ்யா மட்டும் அல்ல அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.

'அப்போது கூறியது...' - எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு தரப்பு விளக்கம்

ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எக்ஸ் தளத்தில், 'சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது' எ... மேலும் பார்க்க

இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் - பின்னணி?

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், இன்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8-வது வகை பங்களாவில் இருந்து காலி செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் ... மேலும் பார்க்க

'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாக குழு பட்டியலை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பட்டியலில், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், பாமக தலைவ... மேலும் பார்க்க

"முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதே நேரம்..."- பீட்டர் அல்போன்ஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

Reuters: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?

Reuters - இது பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் இந்தியாவின் எக்ஸ் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது, 'சட்டப்பூர்வமான கோரிக்கை' என்கிற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. ஆனால்... மேலும் பார்க்க

'வன்னியர் சமுதாய மக்களும், பட்டியிலின மக்களும் இணைந்தால்..!' - ஆட்சி அமைப்பது குறித்து அன்புமணி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் பாமக தலைவர் ... மேலும் பார்க்க