செய்திகள் :

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

post image

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் என பத்து சம்பவங்களில் இதுவரை 14 பேர் பலியாகினர். அதே நேரத்தில் காணாமல் போன 31 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மண்டி மாவட்டத்தில் உள்ள தல்வாரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மேக வெடிப்பின்போது வீட்டின் வெளியே இருந்த குழந்தை நீதிகாவின் தந்தை ரமேஷ் குமார்(31) நீர் ஓட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடல் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் ரமேஷை தேடிச் சென்ற நீதிகாவின் தாயார்(24), பாட்டி பூர்ணு தேவி(59) ஆகியோரும் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர்கள் இருவரும் மேக வெடிப்பில் அடித்துச் செல்லப்பட்டனரா அல்லது இறந்துவிட்டனரா என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால் 10 மாத குழந்தை நீதிகா வீட்டில் தனியாக இருந்துள்ளது. குழந்தை அழுவதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரான பிரேம் சிங், ரமேஷின் உறவினரும், முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாகுரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுமான பல்வந்திடம் அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து பல்வந்த் கூறுகையில், குழந்தை எங்களிடம் உள்ளது. நிறைய அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சோகம் பற்றி கேள்விப்பட்ட பிறகு குழந்தைக்கு உதவ மக்கள் பலர் முன்வருகிறார்கள் என்றார்.

கால்பந்து உலகில் மீண்டும் சோகம்..! பயர்ன் மியூனிக் இளம் வீரர் மருத்துவமனையில் அனுமதி!

Ten-month-old Neetika is probably the lone survivor of her family, whose three members were either washed away or died in a cloudburst that hit Talwara village in Mandi district.

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவ... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க