செய்திகள் :

“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்

post image

ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர்.

ஈரானிலிருந்து வரும் மக்களை ஆப்கானிஸ்தானுக்குள் அனுமதிக்க தேவையான நடைமுறைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் இருநாட்டுக்கிடையிலான ‘இஸ்லாம் ஃகாலா’ எல்லையில் கடும் கூட்டம் காணப்படுகிறது.

இதனால் ஆப்கன் எல்லையில் ‘அவசரநிலை’ ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் ஈரான் அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கன் அகதிகள் ஈரானிலிருந்து வெளியேறி வருகின்றனர். சுமார் 60 லட்சம் ஆப்கன் மக்கள் ஈரானில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில், புதிய உத்தரவால் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்.

ஜூன் மாதம் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் ஈரானிலிருந்து திரும்பியிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் மக்கள் குடியேற்றம் அதிகரிப்பதால் அங்கு அவசரநிலை நிலவுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. இந்த ஓராண்டில் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து 14 லட்சம் ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 25 சதவீதத்தினர் குழந்தைகள்.

ஈரானில் இருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரிகளின் கடும் அழுத்தத்தாலும் கைது நடவடிக்கைகளுக்கு பயந்தும் வேறு வழியின்றி தாயகம் திரும்புவதாக ஆப்கன் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, ஈரானிலிருந்து எல்லை சென்றடைந்த ஒரு அகதி பேசியதாவது: “ஈரானில் கடும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைவிட எமது சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைக்க தயாராக இருக்கிறோம்” என்கிறார்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, வெளிநாடுகளின் அகதிகள் வெளியேற்ற நடவடிக்கை பெரும் சுமையாக அமைந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, ஆப்கன் அகதிகளை வெளியேற்றுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பல நாடுகளையும் ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.

Afghan refugees arrive from Iran at Islam Qala border between Afghanistan and Iran

டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா

அமெரிக்காவின் வரி விதிப்பை ஜப்பான் எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்று ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தெரிவித்துள்ளார்.ஜப்பானிய பொருள்களுக்கு அமெரிக்கா 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம்! - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

இஸ்ரேல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம் என்று லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நையீம் ஃக்வாஸ்ஸெம் தெரிவித்தார்.கடந்த நவம்பரில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி,... மேலும் பார்க்க

சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்க... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார்.அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவ... மேலும் பார்க்க

அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க