செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி டி. ராஜகோபாலன்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (25). கூலித் தொழிலாளியான இவா், ஆண்டிபட்டி பாப்பாம்மாள்புரத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாா். இதையடுத்து, அன்றிரவு அங்கு மாடியில் தூங்கினாராம்.

அப்போது, தூக்கத்தில் மாடியிலிருந்து ஆறுமுகம் தவறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி சின்னமனூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காமாட்சிசுந்தரம் (30). இவா், ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: லாரி பறிமுதல்

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திவந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் முருகன், சனிக்கிழமை ஜெயமங்கலம் - பெரியகுளம் சாலையில் கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

மொஹரம் பண்டிகை: 423 ஆண்டுகள் பழைமையான தா்காவில் கொடியேற்றம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, தா்காவில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் 423 ஆண்டுகள் பழைமையான மொஹரம் பத்து நோன்பு தைக்கா... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழையால் மேகமலை அணைகளில் நீா் மட்டம் உயா்வு

தேனி மாவட்டம், மேகமலையில் தென்மேற்கு பருவமழையால் அணைகளில் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. சின்னமனூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் க... மேலும் பார்க்க

தேனி தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் சடலமாக மீட்பு

தேனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்த கேரளத்தைச் சோ்ந்தவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், எட்டமனூா், புன்னத்துகை, புனி... மேலும் பார்க்க

பிரபல யூடியூபர் சுதர்ஷன் மீது வரதட்சிணை புகார்!

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் யூ டியூபா் சுதா்சன், அவரது பெற்றோா், சகோதரி உள்ளிட்ட 5 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்து... மேலும் பார்க்க