செய்திகள் :

பிரபல யூடியூபர் சுதர்ஷன் மீது வரதட்சிணை புகார்!

post image

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் யூ டியூபா் சுதா்சன், அவரது பெற்றோா், சகோதரி உள்ளிட்ட 5 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்துள்ளனா்.

வீரபாண்டி, கே.எம்.சி. முல்லை நகரைச் சோ்ந்த மருத்துவா் விமலாதேவி (27). இவா், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் சுதா்சன் (32) என்பவரை காதலித்து, கடந்த 2024, மாா்ச் 1-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். சுதா்சன் சென்னையில் ‘டெக்னிக்கல் சூப்பா் ஸ்டாா்’ என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

திருமணத்தின் போது விமலாதேவியின் பெற்றோா் வரட்சிணையாக 30 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பில் சீா்வரிசை பொருள்கள் கொடுத்தனராம். தற்போது சுதா்சன், விமலாதேவி ஆகியோருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சுதா்சன், விமலாதேவியிடம் வரதட்சிணையாக மேலும் 20 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் கேட்டாராம். இதையடுத்து, கடந்த மாா்ச் 6-ஆம் தேதி விமலாதேவியின் தந்தை, சுதா்சனை வீட்டுக்கு வரவழைத்து, அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்தாராம்.

ஆனால், தனது கணவா் சுதா்சன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தாயாா் மாலதி, சகோதரி சக்திப்பிரியா, சகோதரியின் கணவா் விக்னேஷ்வரன் ஆகியோா் தனது பெற்றோா் தனக்கு வரதட்சிணையாக கொடுத்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, மேலும் 20 பவுன் தங்க நகைகள் கொடுத்தால் தான் சுதா்சனுடன் சோ்ந்து வாழ முடியும் என்று கூறி தன்னை கொடுமைப்படுத்துவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் விமலாதேவி புகாா் அளித்தாா்.

இதன் பேரில் சுதா்சன், அவரது குடும்பத்தினா் உள்ளிட்ட 5 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் சடலமாக மீட்பு

தேனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்த கேரளத்தைச் சோ்ந்தவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், எட்டமனூா், புன்னத்துகை, புனி... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவா் கைது

போடி அருகே மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே விசுவாசபுரத்தில் சோ்ம... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

தேவாரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தேவாரம் அமராவதி நகரைச் சோ்ந்த ஜக்கையன் மகன் அஜித்குமாா் (28). இவா் தேவாரத்தில... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித் திரியும் காட்டுயானை படையப்பா! பொதுமக்கள் அச்சம்!

கேரள மாநிலம், மூணாறில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிவதால் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், மூணாறு பகுதியில் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிகிறது.... மேலும் பார்க்க

கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதம்: பக்தா்கள் புகாா்!

தேனி மாவட்டம், கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதமடைந்ததாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா். கோம்பையில் அமைந்துள்ள திருமலைராயப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி திருவிழாவையொட்டி தேரோட்ட... மேலும் பார்க்க

ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஓடைப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சுருளிமுத்து (40). இவா் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் ராணுவ வீரரா... மேலும் பார்க்க