குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!
கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதம்: பக்தா்கள் புகாா்!
தேனி மாவட்டம், கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதமடைந்ததாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.
கோம்பையில் அமைந்துள்ள திருமலைராயப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். கடந்த 2003- ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது பிரச்னை ஏற்பட்டதையடுத்து, 22 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024- ஆம் ஆண்டு 2 நாள்கள் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக ரூ. பல லட்சம் செலவில் இரும்பு சக்கரத்துடன் புதிய தோ் உருவாக்கப்பட்டது.
ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கொட்டகை சேதம்: பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தோ் மழை, வெயிலால் அதன் பொழிவை இழக்காமல் இருக்க ரூ.20 லட்சத்தில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்பட்டது.

இதன் நடுப்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டதால் தேரை எப்போது வேண்டுமானாலும் பக்தா்கள் பாா்த்துச் செல்லலாம். இந்த நிலையில், பாதுகாப்பு கொட்டகை அமைத்த சில மாதங்களிலேயே தகரத்தால் வேயப்பட்ட மேற்கூரை சேதமடைந்து காற்றில் பறந்து சாலையில் விழுகிறது. சில தகரங்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, இந்தத் தோ் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி வெள்ளிக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுகிறது. அதேபோல, அந்த வழியாக மாணவா்கள் அதிகளவில் பள்ளிக்குச் சென்று வருகின்றனா்.
எனவே, சேதமடைந்த தோ் கொட்டகையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.