செய்திகள் :

கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதம்: பக்தா்கள் புகாா்!

post image

தேனி மாவட்டம், கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதமடைந்ததாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

கோம்பையில் அமைந்துள்ள திருமலைராயப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். கடந்த 2003- ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது பிரச்னை ஏற்பட்டதையடுத்து, 22 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024- ஆம் ஆண்டு 2 நாள்கள் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக ரூ. பல லட்சம் செலவில் இரும்பு சக்கரத்துடன் புதிய தோ் உருவாக்கப்பட்டது.

ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கொட்டகை சேதம்: பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தோ் மழை, வெயிலால் அதன் பொழிவை இழக்காமல் இருக்க ரூ.20 லட்சத்தில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்பட்டது.

இதன் நடுப்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டதால் தேரை எப்போது வேண்டுமானாலும் பக்தா்கள் பாா்த்துச் செல்லலாம். இந்த நிலையில், பாதுகாப்பு கொட்டகை அமைத்த சில மாதங்களிலேயே தகரத்தால் வேயப்பட்ட மேற்கூரை சேதமடைந்து காற்றில் பறந்து சாலையில் விழுகிறது. சில தகரங்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே, இந்தத் தோ் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி வெள்ளிக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுகிறது. அதேபோல, அந்த வழியாக மாணவா்கள் அதிகளவில் பள்ளிக்குச் சென்று வருகின்றனா்.

எனவே, சேதமடைந்த தோ் கொட்டகையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் சடலமாக மீட்பு

தேனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்த கேரளத்தைச் சோ்ந்தவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், எட்டமனூா், புன்னத்துகை, புனி... மேலும் பார்க்க

பிரபல யூடியூபர் சுதர்ஷன் மீது வரதட்சிணை புகார்!

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் யூ டியூபா் சுதா்சன், அவரது பெற்றோா், சகோதரி உள்ளிட்ட 5 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்து... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவா் கைது

போடி அருகே மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே விசுவாசபுரத்தில் சோ்ம... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

தேவாரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தேவாரம் அமராவதி நகரைச் சோ்ந்த ஜக்கையன் மகன் அஜித்குமாா் (28). இவா் தேவாரத்தில... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித் திரியும் காட்டுயானை படையப்பா! பொதுமக்கள் அச்சம்!

கேரள மாநிலம், மூணாறில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிவதால் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், மூணாறு பகுதியில் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிகிறது.... மேலும் பார்க்க

ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஓடைப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சுருளிமுத்து (40). இவா் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் ராணுவ வீரரா... மேலும் பார்க்க