செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை

post image

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தனது சொந்த சர்வீஸ் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

54 ராஷ்டிரிய ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்ட வீரர், சனிக்கிழமை இரவு ரஜோரி நகரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் சோல்கி கிராமத்தில் உள்ள முகாமின் தலைமையகத்தில் பணியில் இருந்தபோது பலியானார்.

துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும் சக வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அங்கு வீரர் ஒருவர் பலியாகியிருப்பதைக் கண்டனர்.

ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்செயலாக அவரது துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறியதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

மேலும் அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் எப்போது?

An army personnel died of a bullet injury from his own service rifle inside a camp in Rajouri district of Jammu and Kashmir, officials said on Sunday.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க

தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் கொலை வழக்கில் பாமக நிர்வாகி உள்பட மூவர் சரண்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை வழக்கில் மூவர் சரணடைந்தனர்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,... மேலும் பார்க்க

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது: ஜி.கே. வாசன்

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியா... மேலும் பார்க்க

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மை வாய்ந்த இத்த... மேலும் பார்க்க