செய்திகள் :

மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்களும் மீட்பு

post image

மணிப்பூரில் தேடுதல் நடவடிக்கையின்போது இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது, மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உளவுத்துறை அடிப்படையிலான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பிரேபக் அமைப்பைச் சேர்ந்த பெண் சனிக்கிழமை தௌபாலில் உள்ள சலுங்பாம் பகுதியில் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள நாகமாபால் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சண்டேல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 12 துப்பாக்கிகள், நான்கு ஐஇடிக்கள் மற்றும் நான்கு கையெறி குண்டுகள் அடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன வன்முறை வெடித்ததில் இருந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை

Security forces arrested two militants, including a woman, belonging to a proscribed outfit in Manipur's Thoubal and Imphal West districts, police said on Sunday.

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது. வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் த... மேலும் பார்க்க

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவ... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க